Monday, November 01, 2004

எப்போதோ (பொழுது போகாமல்!) எழுதிய சில 'கவிதை'கள்!

கீழே பதியப்பட்டவை கிட்டத்தட்ட 20 வருடங்கள் தொன்மையானவை!?!? எனவே, படித்து விட்டு தயவு செய்து திட்டவோ அடிக்கவோ வராதீங்க! படிச்சதுக்கு அப்பால, கண்டுக்காம போய்கினே இருங்க!

1. பார்வையைப் பொறுத்து!

கவிதைக் கப்பலின் மேல் எனது
'கற்பனை' எனும் படகு மோதுவதால்
சிதறப் போவது படகு தானே,
கப்பலுக்கு சேதம் அதிகமில்லை!
அதனால் தான் நானும் கவிதை எழுதத் துணிந்தேன்,
என்றேன் என் தோழனிடம், அதற்கு அவன்,
'கவிதை' விமானத்தின் மேல் உன் 'கற்பனை' பறவை
மோதுவதால் விளையும் பங்கத்தை யோசி, என்றான்!

2. ஜில்-1

இப்பொழுதெல்லாம் தென்றல் சிறிது வேகமாக வீசினால்
என் மனதில் மகிழ்ச்சிக்கு பதில் அச்சமே பிறக்கிறது!
உன் துடி இடையை முறிக்க வாயுதேவன் அனுப்பிய
அஸ்திரம் தானே அது!

3. ஜில்-2

லேசான காய்ச்சல் குணமடைய
டாக்டரிடம் சென்றேன் ஒரு முறை,
ஸ்டெத்தை நெஞ்சில் வைத்தவர்
திகைத்து விட்டார்!
'என்ன உங்கள் இதயத் துடிப்பையே
உணர முடியவில்லையே என்று!'
அவரறிவாரா நான் என் இதயத்தை
உன்னிடம் தந்திருப்பதை!
நான் டாக்டரிடம் செல்வதையே நிறுத்தி விட்டேன்
அவர் கேட்கும் இவ்வினாவுக்காகவே!!!

கீழுள்ளவை GCT வகுப்பறைகளில் ('கடி' பட்ட வேதனையில்!) எழுதியவை! சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை 'மன்னிக்க வேண்டுகிறேன்'!

மலைகளயும் சிலைகளையும்
வெறுத்தார் மாந்தரில்லை!
நான் மனிதனாக இல்லாவிடினும் பரவாயில்லை,
எனக்கு 'அண்ணாமலை'யைக் கண்டாலே கடுப்பு!

செல்வங்கள் வேண்டாம்,
சிற்றின்பம் வேண்டாம்
தப்பித்தால் போதும்,
அ(ஆ)றுமுகத்திடமிருந்து!

தமிழ்நாட்டை தன் பேச்சுத் திறனால்
கலக்கினார் அந்நாள் அண்ணாதுரை!
இவரும் தான் எங்கள் அடிவயிற்றை கலக்குகிறார்,
தன் நவீன ஆங்கில உச்சரிப்புகளால்!
இவர் பல்ஸ் டெக்ணீ ...க் (Pulse Techniiiiique!) வகுப்பெடுக்கும்
எங்கள் புதுமை அண்ணாதுரை!

என்றென்றும் அன்புடன்,
பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails